விழிகளின் கவனத்தை ஈர்க்க விழிப்புணர்வு ஓவியம் வரைந்து களப்பணியில் ஈடுபட்ட ஆர்வலர்கள்

கோவை, டிசம்பர் 31

கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களை தூய்மையாக வைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் ஓவியம் வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் உக்கடம் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன் (47-வது வார தொடர் களப்பணி) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, குளங்களைத் தூய்மையாக வைக்க வேண்டிய அத்தியாவசிய கருத்துக்கள் அடங்கி வாசகங்கள், உக்கடம் குளத்தின் அருகில் இருக்கும் மீன் வணிக வளாக சுற்றுப்புற சுவரில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



என்னை ஒருமுறை பயன்படுத்தினால் இன்பம்...பிறகு உங்கள் தலைமுறைக்கு என்றென்றும் துன்பம்...- இப்படிக்கு பிளாஸ்டிக்.

ஒவ்வொரு துளி நீரும் தலைமுறைக்கு அவசியம்...என் குப்பை என் பொறுப்பு...நொய்யல் கோவையின் அடையாளம்...மஞ்சப்பையே நம் அடையாளம்...

மஞ்சப்பை கொண்டு வா...நீ தான் Hero..மரம் வளர்ப்போம் மழைபெறுவோம்...நொய்யலை காப்போம்...பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்...நீர் பயன்படுத்தும் அளவு...போன்ற வரைதலும்.... போன்ற வாசகங்கள் இடம்பெற்றன. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...