கோவை, டிசம்பர் 31
கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களை தூய்மையாக வைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் ஓவியம் வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் உக்கடம் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன் (47-வது வார தொடர் களப்பணி) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, குளங்களைத் தூய்மையாக வைக்க வேண்டிய அத்தியாவசிய கருத்துக்கள் அடங்கி வாசகங்கள், உக்கடம் குளத்தின் அருகில் இருக்கும் மீன் வணிக வளாக சுற்றுப்புற சுவரில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

என்னை ஒருமுறை பயன்படுத்தினால் இன்பம்...பிறகு உங்கள் தலைமுறைக்கு என்றென்றும் துன்பம்...- இப்படிக்கு பிளாஸ்டிக்.
ஒவ்வொரு துளி நீரும் தலைமுறைக்கு அவசியம்...என் குப்பை என் பொறுப்பு...நொய்யல் கோவையின் அடையாளம்...மஞ்சப்பையே நம் அடையாளம்...
மஞ்சப்பை கொண்டு வா...நீ தான் Hero..மரம் வளர்ப்போம் மழைபெறுவோம்...நொய்யலை காப்போம்...பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்...நீர் பயன்படுத்தும் அளவு...போன்ற வரைதலும்.... போன்ற வாசகங்கள் இடம்பெற்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களை தூய்மையாக வைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் ஓவியம் வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் உக்கடம் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன் (47-வது வார தொடர் களப்பணி) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, குளங்களைத் தூய்மையாக வைக்க வேண்டிய அத்தியாவசிய கருத்துக்கள் அடங்கி வாசகங்கள், உக்கடம் குளத்தின் அருகில் இருக்கும் மீன் வணிக வளாக சுற்றுப்புற சுவரில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

என்னை ஒருமுறை பயன்படுத்தினால் இன்பம்...பிறகு உங்கள் தலைமுறைக்கு என்றென்றும் துன்பம்...- இப்படிக்கு பிளாஸ்டிக்.
ஒவ்வொரு துளி நீரும் தலைமுறைக்கு அவசியம்...என் குப்பை என் பொறுப்பு...நொய்யல் கோவையின் அடையாளம்...மஞ்சப்பையே நம் அடையாளம்...
மஞ்சப்பை கொண்டு வா...நீ தான் Hero..மரம் வளர்ப்போம் மழைபெறுவோம்...நொய்யலை காப்போம்...பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்...நீர் பயன்படுத்தும் அளவு...போன்ற வரைதலும்.... போன்ற வாசகங்கள் இடம்பெற்றன.