கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய வாகனங்கள்

கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகனங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, டிசம்பர் 31

கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகனங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் தொடங்கி, வரதராஜபுரம் வரையில் உள்ள காமராஜர் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த மூன்று தினங்களுக்கு முன் துவங்கியது. 

தினமும் இரவு நேரங்களில் மட்டும் அப்பகுதியில் பணிகள் நடைபெறுகின்றன. 

அவ்வாறு, சிங்கநல்லூர் பேருந்து நிலையம் முன்பு தோண்டப்பட்ட குழி மண் கொண்டு மூடப்பட்டது. குழி தோண்டும்போது குடி நீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக குழியின் மேல்புறம் தண்ணீர் தேங்கியது. இதில், குழியின் மீது போடப்பட்ட மண் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. 



இதையறியாமல், இன்று காலை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஒரு பேருந்தும், மினி லாரி ஒன்றும் மண் மேட்டின் மீது ஏறியது. வாகனங்களின் பாரம் தாங்காமல் மண் தரைக்குள் இறங்கியதில் இரண்டு வாகனங்களும் பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட குழியின் இறங்கின.



இந்த விபத்தில் அதிஷ்ட வசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வாகனங்களை மீட்டனர். 

இந்த சம்பவத்தால் சிங்காநல்லூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 



Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...