கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய வாகனங்கள்

கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகனங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, டிசம்பர் 31

கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகனங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் தொடங்கி, வரதராஜபுரம் வரையில் உள்ள காமராஜர் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த மூன்று தினங்களுக்கு முன் துவங்கியது. 

தினமும் இரவு நேரங்களில் மட்டும் அப்பகுதியில் பணிகள் நடைபெறுகின்றன. 

அவ்வாறு, சிங்கநல்லூர் பேருந்து நிலையம் முன்பு தோண்டப்பட்ட குழி மண் கொண்டு மூடப்பட்டது. குழி தோண்டும்போது குடி நீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக குழியின் மேல்புறம் தண்ணீர் தேங்கியது. இதில், குழியின் மீது போடப்பட்ட மண் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. 



இதையறியாமல், இன்று காலை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஒரு பேருந்தும், மினி லாரி ஒன்றும் மண் மேட்டின் மீது ஏறியது. வாகனங்களின் பாரம் தாங்காமல் மண் தரைக்குள் இறங்கியதில் இரண்டு வாகனங்களும் பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட குழியின் இறங்கின.



இந்த விபத்தில் அதிஷ்ட வசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வாகனங்களை மீட்டனர். 

இந்த சம்பவத்தால் சிங்காநல்லூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...