அரசியலுக்கு வருவது உறுதி, தனி கட்சி தொடங்குவேன்: நடிகர் ரஜினிகாந்த்


டிசம்பர் 31

தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக ரசிகர்களை சந்தித்து பேசி வரும் ரஜினி, இன்று கடைசி நாளில் ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில்,  அரசியலுக்கு வருவதில் எனக்கு பயமில்லை. ஊடகங்களை கண்டு மட்டுமே பயம்.  நான் அரசியலுக்கு வருவது உறுதி.

தனி கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன். நேரம் குறைவாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. நான் அரசியலுக்கு வருவது காலத்தில் கட்டாயம்.

பழைய காலத்தில் ராஜாக்கள் அண்டை நாடுகளில் கொள்ளையடித்தனர். ஆனால் தற்போது சொந்த நாட்டிலேயே அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக காவலர்கள் (தொண்டர்கள்) எனக்கு வேணும். அவர்களை செயல்பட வைக்கும் பிரஜையாக மட்டுமே நான் இருப்பேன். மாநிலம் முழுவதும் நமது மன்றங்கள் திறக்கப்பட வேண்டும். மன்றங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பெண்கள், இளைஞர்களை இணைக்க வேண்டும்

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நமது செயல்திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சென்றடைய செய்ய வேண்டும். அறிவிக்கப்படும் திட்டங்களை செயல்படுத்தா விட்டால் 3 ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன். இவ்வாறு கூறினார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...