இளைஞர்களிடையே புதிய எண்ணங்களை உருவாக்கும் ”ஐடியத்தான் - 2017”

கோவை, டிசம்பர் 30

எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் சார்பில் இளைஞர்களிடையே புதிய எண்ணங்களை உருவாக்கும் விதமாக ”ஐடியத்தான் -2017” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ”தி யூத் ஃபார்ம்” மற்றும் ஸ்டார்ட்அப் பயணம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஜி. நவின்கிருஷ்ணா மற்றும் எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநர் நலின் சுப்ரமணியம் ஆகியோர் ”ஐடியத்தான் -2017” என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 



இந்த நிகழ்ச்சியானது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நல்ல உத்வேகம் அளிக்கக்கூடிய மற்றும் புதிய எண்ணங்களை உருவாக்கும் வகையிலான யோசனைகளை வழங்குபவர்களுக்கு பாராட்டு தெரிவித்து விருதுகள் வழங்கப்படுவதாகும். இதில், சுமார் 1,600 பேர் அடங்கிய 420 அணிகள் கலந்து கொண்டன. 3 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் 49 அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.



தொடர்ந்து, 48 மணிநேரம் நடக்கும் இந்த இறுதிச்சுற்றுப் போட்டியில், வெற்றி பெறும் முதல் 10 அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும். முதல் 5 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கம் வழங்கப்படும். நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி, எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநருடன் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். 

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய ”தி யூத் ஃபார்ம்” மற்றும் ஸ்டார்ட்அப் பயணம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஜி. நவின்கிருஷ்ணா, இளைஞர்கள் மனதில் புதிய எண்ணத்தை உருவாக்கவும், பல ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், தரமான வாழ்க்கையை வாழவும் முடியும்,. இவ்வாறு கூறினார். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...