இளைஞர்களிடையே புதிய எண்ணங்களை உருவாக்கும் ”ஐடியத்தான் - 2017”

கோவை, டிசம்பர் 30

எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் சார்பில் இளைஞர்களிடையே புதிய எண்ணங்களை உருவாக்கும் விதமாக ”ஐடியத்தான் -2017” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ”தி யூத் ஃபார்ம்” மற்றும் ஸ்டார்ட்அப் பயணம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஜி. நவின்கிருஷ்ணா மற்றும் எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநர் நலின் சுப்ரமணியம் ஆகியோர் ”ஐடியத்தான் -2017” என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 



இந்த நிகழ்ச்சியானது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நல்ல உத்வேகம் அளிக்கக்கூடிய மற்றும் புதிய எண்ணங்களை உருவாக்கும் வகையிலான யோசனைகளை வழங்குபவர்களுக்கு பாராட்டு தெரிவித்து விருதுகள் வழங்கப்படுவதாகும். இதில், சுமார் 1,600 பேர் அடங்கிய 420 அணிகள் கலந்து கொண்டன. 3 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் 49 அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.



தொடர்ந்து, 48 மணிநேரம் நடக்கும் இந்த இறுதிச்சுற்றுப் போட்டியில், வெற்றி பெறும் முதல் 10 அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும். முதல் 5 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கம் வழங்கப்படும். நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி, எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநருடன் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். 

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய ”தி யூத் ஃபார்ம்” மற்றும் ஸ்டார்ட்அப் பயணம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஜி. நவின்கிருஷ்ணா, இளைஞர்கள் மனதில் புதிய எண்ணத்தை உருவாக்கவும், பல ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், தரமான வாழ்க்கையை வாழவும் முடியும்,. இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...