மாநகராட்சி சார்பில் தூய்மை தூதர்கள் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா

கோவை, டிசம்பர் 30

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவில் தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் ஸ்வச் சர்வெக்ஷான் 2018-ன் ஒருபகுதியாக தூய்மை தூதர்கள் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா கோவை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

கோவையில் தனியார் ஹோட்டலில் இந்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் ஜனவரி 4-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் 4,041 உள்ளாட்சி அமைப்புகள் கலந்து கொள்கிறது. இதில், கோவை மாநகராட்சியும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பில் பங்கேற்க உள்ளது.

அதில், ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் மருத்துவமனைகள், உணவகங்கள், காய்கறி மொத்த விற்பனையகங்களுக்கான தூய்மை கணக்கெடுப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. அக்கணக்கெடுப்பில் முழுமையாகத் தூய்மை பணியாற்றி சிறப்பான தரவரிசைப்பட்டியல் பெற்ற தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் காய்கறி மொத்த விற்பனையகங்களின் நிர்வாகிகள் மற்றும் கோவை மாநகராட்சியில் சிறப்பாக தூய்மை பணியாற்றிய மாநகராட்சி லாரி ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஸ்வச் லோகோ மற்றும் ஸ்வச் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, கோவை மாநகராட்சி தூய்மை தூதர்கள் திரைப்பட நடிகர் கே.பாக்கியராஜ், பூர்ணிமா பாக்கியராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் சரவணன், தன்னார் அமைப்பினர் மற்றும் கோவை முன்னணி தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...