மாநகராட்சி சார்பில் தூய்மை தூதர்கள் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா

கோவை, டிசம்பர் 30

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவில் தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் ஸ்வச் சர்வெக்ஷான் 2018-ன் ஒருபகுதியாக தூய்மை தூதர்கள் சந்திப்பு மற்றும் பாராட்டு விழா கோவை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

கோவையில் தனியார் ஹோட்டலில் இந்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் ஜனவரி 4-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் 4,041 உள்ளாட்சி அமைப்புகள் கலந்து கொள்கிறது. இதில், கோவை மாநகராட்சியும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பில் பங்கேற்க உள்ளது.

அதில், ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் மருத்துவமனைகள், உணவகங்கள், காய்கறி மொத்த விற்பனையகங்களுக்கான தூய்மை கணக்கெடுப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. அக்கணக்கெடுப்பில் முழுமையாகத் தூய்மை பணியாற்றி சிறப்பான தரவரிசைப்பட்டியல் பெற்ற தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் காய்கறி மொத்த விற்பனையகங்களின் நிர்வாகிகள் மற்றும் கோவை மாநகராட்சியில் சிறப்பாக தூய்மை பணியாற்றிய மாநகராட்சி லாரி ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஸ்வச் லோகோ மற்றும் ஸ்வச் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, கோவை மாநகராட்சி தூய்மை தூதர்கள் திரைப்பட நடிகர் கே.பாக்கியராஜ், பூர்ணிமா பாக்கியராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் சரவணன், தன்னார் அமைப்பினர் மற்றும் கோவை முன்னணி தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...