கோவை, டிசம்பர் 30
கோவை - திருச்சி சாலையில் உள்ள நஞ்சப்பா நகர் குடியிருப்பில் கேபிள் பதிக்க தோண்டப்பட்டு ஒரு மாதமாக மூடப்படாமல் இருக்கும் குழிகளை உடனடியாக மூடாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவை - திருச்சி சாலையில், குளத்தேரி அருகே நஞ்சப்பா நகர் குடியிருப்பு பகுதியில், கேபிள் பதிக்க தனியார் நிறுவனம் (ஏர்டெல்) மாநகராட்சியிடம் டெண்டர் எடுத்துள்ளது. இந்தப் பகுதியில் கேபிள் பதிக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டியுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்தும், தெருக்களில் உள்ள குழிகள் 2 மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் குழாய்கள் உடைந்ததாலும், குடிநீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ-விடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, எம்எல்ஏ நா.கார்த்திக் நஞ்சப்பா நகர் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து, எம்எல்ஏவின் வருகை குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், டெண்டர் எடுத்த நிறுவனமும் வருத்தம் தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக குழியை மூடுவதாக உறுதியளித்தனர்.

இதுதொடர்பாக எம்எல்ஏ நா.கார்த்திக் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் குழி தோண்டப்பட்டு கிடக்கின்றது. இதேபோல, மாநகராட்சியில் பல பகுதிகள் இதே நிலையில் தான் உள்ளது. நஞ்சப்பா நகரில் உள்ள இந்த குழிகளை உடனடியாக மூடுவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். என்றார்.
கோவை - திருச்சி சாலையில் உள்ள நஞ்சப்பா நகர் குடியிருப்பில் கேபிள் பதிக்க தோண்டப்பட்டு ஒரு மாதமாக மூடப்படாமல் இருக்கும் குழிகளை உடனடியாக மூடாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவை - திருச்சி சாலையில், குளத்தேரி அருகே நஞ்சப்பா நகர் குடியிருப்பு பகுதியில், கேபிள் பதிக்க தனியார் நிறுவனம் (ஏர்டெல்) மாநகராட்சியிடம் டெண்டர் எடுத்துள்ளது. இந்தப் பகுதியில் கேபிள் பதிக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டியுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்தும், தெருக்களில் உள்ள குழிகள் 2 மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் குழாய்கள் உடைந்ததாலும், குடிநீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ-விடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, எம்எல்ஏ நா.கார்த்திக் நஞ்சப்பா நகர் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து, எம்எல்ஏவின் வருகை குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், டெண்டர் எடுத்த நிறுவனமும் வருத்தம் தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக குழியை மூடுவதாக உறுதியளித்தனர்.

இதுதொடர்பாக எம்எல்ஏ நா.கார்த்திக் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் குழி தோண்டப்பட்டு கிடக்கின்றது. இதேபோல, மாநகராட்சியில் பல பகுதிகள் இதே நிலையில் தான் உள்ளது. நஞ்சப்பா நகரில் உள்ள இந்த குழிகளை உடனடியாக மூடுவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். என்றார்.