சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை மூட நடவடிக்கை எடுக்காவிடில் முற்றுகைப் போராட்டம்: திமுக

கோவை, டிசம்பர் 30

கோவை - திருச்சி சாலையில் உள்ள நஞ்சப்பா நகர் குடியிருப்பில் கேபிள் பதிக்க தோண்டப்பட்டு ஒரு மாதமாக மூடப்படாமல் இருக்கும் குழிகளை உடனடியாக மூடாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நா.கார்த்திக் தெரிவித்துள்ளார். 

கோவை - திருச்சி சாலையில், குளத்தேரி அருகே நஞ்சப்பா நகர் குடியிருப்பு பகுதியில், கேபிள் பதிக்க தனியார் நிறுவனம் (ஏர்டெல்) மாநகராட்சியிடம் டெண்டர் எடுத்துள்ளது. இந்தப் பகுதியில் கேபிள் பதிக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டியுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்தும், தெருக்களில் உள்ள குழிகள் 2 மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் குழாய்கள் உடைந்ததாலும், குடிநீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ-விடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, எம்எல்ஏ நா.கார்த்திக் நஞ்சப்பா நகர் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து, எம்எல்ஏவின் வருகை குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், டெண்டர் எடுத்த நிறுவனமும் வருத்தம் தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக குழியை மூடுவதாக உறுதியளித்தனர். 



இதுதொடர்பாக எம்எல்ஏ நா.கார்த்திக் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் குழி தோண்டப்பட்டு கிடக்கின்றது. இதேபோல, மாநகராட்சியில் பல பகுதிகள் இதே நிலையில் தான் உள்ளது. நஞ்சப்பா நகரில் உள்ள இந்த குழிகளை உடனடியாக மூடுவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். என்றார்.

Newsletter

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...