சிறுதுளி அமைப்பின், ஐம்பதாயிரமாவது மரக்கன்று நடும்விழா


கோவை, டிசம்பர் 30

சிறுதுளி அமைப்பின் சார்பாக நடத்தப்படும் ‘சிறுவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தின்’ ஐம்பதாயிரமாவது மரக்கன்று, சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் திருமதி. வனிதா மோகன் அவர்களால், மருதமலை சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் இன்று நடப்பட்டது.



இவ்வளாகத்தில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக ‘கலாம் வனம்’ என்ற பெயரில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை, சிறுவாக்கி என்னும் நடவு முறையில் நட்டு வளர்க்க, சிறுதுளி அமைப்பினர் திட்டமிட்டனர். அதனைத்தொடர்ந்து புங்கன், பூவரசு, சிவப்புசந்தனம், இயல்வகை, இலுப்பை, தூங்குவாகை, மகாகனி, ஈட்டி, யானை, குன்றுமணி, வாகை, மஞ்சள்கொன்றை, சரக்கொன்றை, குமிழ், மலைவேம்பு மற்றும் புன்னை போன்ற மரவகைகள் நடப்பட்டன.



ஒரு லட்சம் மரக்கன்றுகளை நோக்கி நடத்தப்படும் இந்நிகழ்வில், சிறுதுளி அமைப்பின் உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.



 சிறுதுளி அமைப்பின் இந்த திட்டத்திற்கு ஏராளமான நாற்றுகள் தேவைப்படுவதால், ‘விதையிலிருந்து விருட்சம்’ என்ற திட்டத்தை கிராம மற்றும் நகர்புற பள்ளி மாணவர்களின் ஒத்துழைப்போடு நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதில், நாற்றுகளை உருவாக்குவதற்கான செயல்முறை பயிற்சி மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. விதைகள், தாய்மண், உரம் அதற்கான பை ஆகியன வழங்கப்பட்டு, நாற்றுகளாக உருவாக்கி பராமரித்து சிறுதுளி அமைப்பினரிடம் மாணவர்கள் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...