சிறுதுளி அமைப்பின், ஐம்பதாயிரமாவது மரக்கன்று நடும்விழா


கோவை, டிசம்பர் 30

சிறுதுளி அமைப்பின் சார்பாக நடத்தப்படும் ‘சிறுவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தின்’ ஐம்பதாயிரமாவது மரக்கன்று, சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் திருமதி. வனிதா மோகன் அவர்களால், மருதமலை சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் இன்று நடப்பட்டது.



இவ்வளாகத்தில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக ‘கலாம் வனம்’ என்ற பெயரில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை, சிறுவாக்கி என்னும் நடவு முறையில் நட்டு வளர்க்க, சிறுதுளி அமைப்பினர் திட்டமிட்டனர். அதனைத்தொடர்ந்து புங்கன், பூவரசு, சிவப்புசந்தனம், இயல்வகை, இலுப்பை, தூங்குவாகை, மகாகனி, ஈட்டி, யானை, குன்றுமணி, வாகை, மஞ்சள்கொன்றை, சரக்கொன்றை, குமிழ், மலைவேம்பு மற்றும் புன்னை போன்ற மரவகைகள் நடப்பட்டன.



ஒரு லட்சம் மரக்கன்றுகளை நோக்கி நடத்தப்படும் இந்நிகழ்வில், சிறுதுளி அமைப்பின் உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.



 சிறுதுளி அமைப்பின் இந்த திட்டத்திற்கு ஏராளமான நாற்றுகள் தேவைப்படுவதால், ‘விதையிலிருந்து விருட்சம்’ என்ற திட்டத்தை கிராம மற்றும் நகர்புற பள்ளி மாணவர்களின் ஒத்துழைப்போடு நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதில், நாற்றுகளை உருவாக்குவதற்கான செயல்முறை பயிற்சி மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. விதைகள், தாய்மண், உரம் அதற்கான பை ஆகியன வழங்கப்பட்டு, நாற்றுகளாக உருவாக்கி பராமரித்து சிறுதுளி அமைப்பினரிடம் மாணவர்கள் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...