கோவையில் கஞ்சா கடத்தியதாக நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை, டிசம்பர் 29
கோவையில் கஞ்சா கடத்தியதாக நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பகுதியை சேர்ந்தவர் உமர் (25). பணி நிமித்தமாக கோவை வந்த அவர் கோவைபுதூர் பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு உமரும் மற்றுமொரு நபரும் உக்கடம் பைபாஸ் சாலை வழியாக ஆத்துப்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, உக்கடம் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் உமரின் வாகனத்தை நிறுத்த முயன்றபோது அவர் வண்டியை நிறுத்தாமல் சென்றார். இதானால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டினர். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கரம் வாகனத்தில் இருந்த இருவரும் கீழே விழுந்தனர்.
இந்த சூழலில், உமருடன் வந்த மற்றொரு வாலிபர் தப்பியோடினார். போலீசார் உமரிடம் சோதனை நடத்தியபோது 6 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து உமரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரித்தனர். அப்போது, தன்னுடன் வந்த நபர் 'லிப்ட்' கேட்டு வந்ததாகவும், அவரே கஞ்சா பொட்டலத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறினார்.
தற்போது, உமரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கஞ்சா கடத்தியதாக நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பகுதியை சேர்ந்தவர் உமர் (25). பணி நிமித்தமாக கோவை வந்த அவர் கோவைபுதூர் பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு உமரும் மற்றுமொரு நபரும் உக்கடம் பைபாஸ் சாலை வழியாக ஆத்துப்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, உக்கடம் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் உமரின் வாகனத்தை நிறுத்த முயன்றபோது அவர் வண்டியை நிறுத்தாமல் சென்றார். இதானால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டினர். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கரம் வாகனத்தில் இருந்த இருவரும் கீழே விழுந்தனர்.
இந்த சூழலில், உமருடன் வந்த மற்றொரு வாலிபர் தப்பியோடினார். போலீசார் உமரிடம் சோதனை நடத்தியபோது 6 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து உமரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரித்தனர். அப்போது, தன்னுடன் வந்த நபர் 'லிப்ட்' கேட்டு வந்ததாகவும், அவரே கஞ்சா பொட்டலத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறினார்.
தற்போது, உமரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.