கோவையில் கஞ்சா கடத்தியதாக கேரள வாலிபர் கைது: 6 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவையில் கஞ்சா கடத்தியதாக நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை, டிசம்பர் 29

கோவையில் கஞ்சா கடத்தியதாக நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பகுதியை சேர்ந்தவர் உமர் (25). பணி நிமித்தமாக கோவை வந்த அவர் கோவைபுதூர் பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு உமரும் மற்றுமொரு நபரும் உக்கடம் பைபாஸ் சாலை வழியாக ஆத்துப்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, உக்கடம் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் உமரின் வாகனத்தை நிறுத்த முயன்றபோது அவர் வண்டியை நிறுத்தாமல் சென்றார். இதானால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டினர். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கரம் வாகனத்தில் இருந்த இருவரும் கீழே விழுந்தனர்.

இந்த சூழலில், உமருடன் வந்த மற்றொரு வாலிபர் தப்பியோடினார். போலீசார் உமரிடம் சோதனை நடத்தியபோது 6 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து உமரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரித்தனர். அப்போது, தன்னுடன் வந்த நபர் 'லிப்ட்' கேட்டு வந்ததாகவும், அவரே கஞ்சா பொட்டலத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறினார். 

தற்போது, உமரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...