கோவையில் கஞ்சா கடத்தியதாக கேரள வாலிபர் கைது: 6 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவையில் கஞ்சா கடத்தியதாக நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை, டிசம்பர் 29

கோவையில் கஞ்சா கடத்தியதாக நேற்று கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பகுதியை சேர்ந்தவர் உமர் (25). பணி நிமித்தமாக கோவை வந்த அவர் கோவைபுதூர் பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு உமரும் மற்றுமொரு நபரும் உக்கடம் பைபாஸ் சாலை வழியாக ஆத்துப்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, உக்கடம் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் உமரின் வாகனத்தை நிறுத்த முயன்றபோது அவர் வண்டியை நிறுத்தாமல் சென்றார். இதானால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டினர். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கரம் வாகனத்தில் இருந்த இருவரும் கீழே விழுந்தனர்.

இந்த சூழலில், உமருடன் வந்த மற்றொரு வாலிபர் தப்பியோடினார். போலீசார் உமரிடம் சோதனை நடத்தியபோது 6 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து உமரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரித்தனர். அப்போது, தன்னுடன் வந்த நபர் 'லிப்ட்' கேட்டு வந்ததாகவும், அவரே கஞ்சா பொட்டலத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறினார். 

தற்போது, உமரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...