நீலகிரி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மின்சாரம் தாக்கி விவசாயி பலி, அ.தி.மு.க வினர் மீது பொது மக்கள் கடும் அதிருப்தி



நீலகிரி, டிசம்பர் 28

நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயக்கூலி ஒருவர் பலியாகியுள்ளார். 

நீலகிரி மாவட்டம் கொடப்பமந்து பகுதியை சேர்ந்தவர் பாபு (48). விவசாயக் கூலியான இவர் லாரியின் மூலம் தோட்டத்திற்கு வந்த உரத்தை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பகுதியில் அ.தி.மு.க.வின் கொடி இரும்பு கம்பியில் கட்டி பறக்கவிடப்பட்டிருந்தது. 

அந்த இரும்புக்கம்பி மின்சார ஒயரில் உரசிக்கொண்டிருந்தது. 

இதை கவணிக்காத பாபு அந்த கொடிக்கம்பத்தின் மீது சாய்ந்தார். 

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். 

விவசாயக்கூலியின்  உயிரிழப்புக்கு ஆளும் கட்சியினரின் அலட்சியமே காரணம் என்றும், உயிர்பலிக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடப்பமந்து பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதன்பிறகே, பாபு-வின் மரணம் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டதாக தெரிகிறது.

கடந்த 3-ம் தேதி கோவையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இதற்காக அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற வாலிபர் பரிதாபமாக பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிரலைகளை உருவாக்கியது. 

சாலையை ஆக்கிரமித்து அலங்கார நுழைவு வாயில்கள் அமைத்ததே இவ்விபத்திற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், டிப்பர் லாரி மோதியதால் தான் ரகுபதி பலியானார் என்று கூறி வழக்குப் பதிந்தது கோவை மாநகர காவல்துறை. 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது கோவையில் வாலிபர் பலியானது போல், மீண்டும் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் என்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அலட்சியப்போக்காக செயல்பட்டு, கோவை மற்றும் நீலகிரியில் இரண்டு உயிர்களை காவு வாங்கி விட்டனர் அ.தி.மு.க. வினர் என்று கடுமையான கண்டனங்கள் மக்களிடையே எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...