நீலகிரி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மின்சாரம் தாக்கி விவசாயி பலி, அ.தி.மு.க வினர் மீது பொது மக்கள் கடும் அதிருப்தி



நீலகிரி, டிசம்பர் 28

நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயக்கூலி ஒருவர் பலியாகியுள்ளார். 

நீலகிரி மாவட்டம் கொடப்பமந்து பகுதியை சேர்ந்தவர் பாபு (48). விவசாயக் கூலியான இவர் லாரியின் மூலம் தோட்டத்திற்கு வந்த உரத்தை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பகுதியில் அ.தி.மு.க.வின் கொடி இரும்பு கம்பியில் கட்டி பறக்கவிடப்பட்டிருந்தது. 

அந்த இரும்புக்கம்பி மின்சார ஒயரில் உரசிக்கொண்டிருந்தது. 

இதை கவணிக்காத பாபு அந்த கொடிக்கம்பத்தின் மீது சாய்ந்தார். 

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். 

விவசாயக்கூலியின்  உயிரிழப்புக்கு ஆளும் கட்சியினரின் அலட்சியமே காரணம் என்றும், உயிர்பலிக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடப்பமந்து பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதன்பிறகே, பாபு-வின் மரணம் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டதாக தெரிகிறது.

கடந்த 3-ம் தேதி கோவையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இதற்காக அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற வாலிபர் பரிதாபமாக பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிரலைகளை உருவாக்கியது. 

சாலையை ஆக்கிரமித்து அலங்கார நுழைவு வாயில்கள் அமைத்ததே இவ்விபத்திற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், டிப்பர் லாரி மோதியதால் தான் ரகுபதி பலியானார் என்று கூறி வழக்குப் பதிந்தது கோவை மாநகர காவல்துறை. 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது கோவையில் வாலிபர் பலியானது போல், மீண்டும் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் என்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அலட்சியப்போக்காக செயல்பட்டு, கோவை மற்றும் நீலகிரியில் இரண்டு உயிர்களை காவு வாங்கி விட்டனர் அ.தி.மு.க. வினர் என்று கடுமையான கண்டனங்கள் மக்களிடையே எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...