ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை, டிசம்பர் 28
ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கும் ஒரே விகிதமான ஊதிய விகிதத்தை மாற்ற வேண்டும் என்றும், பணிச்சுமையை கருத்தில் கொண்டு, மேம்பட்ட ஊதிய விகிதம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனவும், மூப்பு பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜோதிகாந்தி, மாவட்ட செயலாளர் லட்சுமி திலகம், பொருளாளர் தங்கமணி ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கும் ஒரே விகிதமான ஊதிய விகிதத்தை மாற்ற வேண்டும் என்றும், பணிச்சுமையை கருத்தில் கொண்டு, மேம்பட்ட ஊதிய விகிதம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனவும், மூப்பு பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜோதிகாந்தி, மாவட்ட செயலாளர் லட்சுமி திலகம், பொருளாளர் தங்கமணி ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.