மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டது.
டிசம்பர் 28
மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டது.
கடந்த ஜூலை 2016 முதல் எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ.2 உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. கேஸ் மீதான மானியம் ரத்தாகும் வரை விலை உயர்த்த அனுமதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கேஸ் சிலிண்டர் மீது 10 முறை விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2017 ஜூன் 1 முதல் காஸ் சிலிண்டர் விலை, அரசு அனுமதியுடன் மாதம் ரூ.4 உயர்த்தப்பட்டது. 2018 மார்ச் வரை விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விலை உயர்த்திக் கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை, மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தில்லி வட்டாரங்கள் கூறுகையில், மாதந்தோறும் விலை உயர்த்தியது மக்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் ஏழை மக்களுக்கு இலவச கேஸ் இணைப்புகளை வழங்கிவிட்டு மறுபுறம் விலை, மாதந்தோறும் உயர்த்தப்படுவதாக பேச்சு எழுந்தது. இதனையடுத்து, விலையை உயர்த்துவது ரத்து செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு, விலை உயர்த்தப்படவில்லை. வரி காரணமாகவே தற்போது விலை உயர்த்தப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டது.
மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டது.
கடந்த ஜூலை 2016 முதல் எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ.2 உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. கேஸ் மீதான மானியம் ரத்தாகும் வரை விலை உயர்த்த அனுமதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கேஸ் சிலிண்டர் மீது 10 முறை விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2017 ஜூன் 1 முதல் காஸ் சிலிண்டர் விலை, அரசு அனுமதியுடன் மாதம் ரூ.4 உயர்த்தப்பட்டது. 2018 மார்ச் வரை விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விலை உயர்த்திக் கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை, மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தில்லி வட்டாரங்கள் கூறுகையில், மாதந்தோறும் விலை உயர்த்தியது மக்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் ஏழை மக்களுக்கு இலவச கேஸ் இணைப்புகளை வழங்கிவிட்டு மறுபுறம் விலை, மாதந்தோறும் உயர்த்தப்படுவதாக பேச்சு எழுந்தது. இதனையடுத்து, விலையை உயர்த்துவது ரத்து செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு, விலை உயர்த்தப்படவில்லை. வரி காரணமாகவே தற்போது விலை உயர்த்தப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டது.