”டிச., 31-ம் தேதி நள்ளிரவு கோவில்களை திறக்கத் தடையில்லை”

புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்களை திறக்கத் தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டிசம்பர் 28

புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்களை திறக்கத் தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:- சைவ கோவில்கள் சிவராத்திரி அன்றும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசி அன்றும் இரவு முழுவதும் திறந்து இருக்க வேண்டும். மற்ற நாட்களில், ஆகம விதிகளின் படி இரவு நேரத்தில் கோவில்கள் திறந்து வைக்கக்கூடாது. இரவு நேரங்களில் காற்றில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும் என்பதால், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் நடையைத் திறக்க வேண்டும். காலகாலமாக நம் மூதாதையர் இந்த நடைமுறையை உருவாக்கி பின்பற்றி வருகின்றனர். 

ஆனால், அண்மைக் காலங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும். இரவு நேரத்தில் கோவில்களை திறக்கக் கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி, ’இந்து கோவில்களை இரவு முழுவதும் திறந்து வைப்பது என்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பல இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. அதுவும், இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களும் ஆகம விதிகளுக்கு எதிராக திறந்து வைக்கப்படுகிறது. கோவில்களை இரவு நேரங்களில் திறக்கக்கூடாது என்பதற்கு பல அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளன’ என்று வாதிட்டார். 

அதற்கு நீதிபதிகள், புத்தாண்டை முன்னிட்டு இரவு நேரங்களில் கோவில்களை திறப்பது என்பது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்த வழக்கை ஏன் தொடர்ந்துள்ளீர்கள்? எனவே, புத்தாண்டை முன்னிட்டு, இந்து கோவில்களை திறக்க இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கை வருகிற ஜனவரி 8-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் தமிழக இந்து சமய அறநிலையைத் துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...