”டிச., 31-ம் தேதி நள்ளிரவு கோவில்களை திறக்கத் தடையில்லை”

புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்களை திறக்கத் தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டிசம்பர் 28

புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்களை திறக்கத் தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:- சைவ கோவில்கள் சிவராத்திரி அன்றும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசி அன்றும் இரவு முழுவதும் திறந்து இருக்க வேண்டும். மற்ற நாட்களில், ஆகம விதிகளின் படி இரவு நேரத்தில் கோவில்கள் திறந்து வைக்கக்கூடாது. இரவு நேரங்களில் காற்றில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும் என்பதால், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் நடையைத் திறக்க வேண்டும். காலகாலமாக நம் மூதாதையர் இந்த நடைமுறையை உருவாக்கி பின்பற்றி வருகின்றனர். 

ஆனால், அண்மைக் காலங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும். இரவு நேரத்தில் கோவில்களை திறக்கக் கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி, ’இந்து கோவில்களை இரவு முழுவதும் திறந்து வைப்பது என்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பல இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. அதுவும், இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களும் ஆகம விதிகளுக்கு எதிராக திறந்து வைக்கப்படுகிறது. கோவில்களை இரவு நேரங்களில் திறக்கக்கூடாது என்பதற்கு பல அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளன’ என்று வாதிட்டார். 

அதற்கு நீதிபதிகள், புத்தாண்டை முன்னிட்டு இரவு நேரங்களில் கோவில்களை திறப்பது என்பது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்த வழக்கை ஏன் தொடர்ந்துள்ளீர்கள்? எனவே, புத்தாண்டை முன்னிட்டு, இந்து கோவில்களை திறக்க இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கை வருகிற ஜனவரி 8-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் தமிழக இந்து சமய அறநிலையைத் துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...