வரும் ஜன., 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8 ம் தேதி கூடும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார்.

டிசம்பர் 28

தமிழக  சட்டப்பேரவை ஜனவரி 8 ம் தேதி கூடும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக ஜூனில் துவங்கி ஜூலையில் நிறைவு பெற்றது. அப்போது, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். அதன்படி, சட்டப்பேரவை வரும் ஜனவரி, 8ல் துவங்க உள்ளது. இதனை சட்டப்பேரவை செயலர் பூபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுவார். அதன்பின், ஆளுநர் உரை மீது, ஒரு வாரம் விவாதம் நடைபெறும். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் முடிந்த பின், முதல்வர் பதில் அளிப்பார். அதன்பின், ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...