வரும் ஜன., 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8 ம் தேதி கூடும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார்.

டிசம்பர் 28

தமிழக  சட்டப்பேரவை ஜனவரி 8 ம் தேதி கூடும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக ஜூனில் துவங்கி ஜூலையில் நிறைவு பெற்றது. அப்போது, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். அதன்படி, சட்டப்பேரவை வரும் ஜனவரி, 8ல் துவங்க உள்ளது. இதனை சட்டப்பேரவை செயலர் பூபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுவார். அதன்பின், ஆளுநர் உரை மீது, ஒரு வாரம் விவாதம் நடைபெறும். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் முடிந்த பின், முதல்வர் பதில் அளிப்பார். அதன்பின், ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...