வரும் ஜன., 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8 ம் தேதி கூடும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார்.

டிசம்பர் 28

தமிழக  சட்டப்பேரவை ஜனவரி 8 ம் தேதி கூடும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக ஜூனில் துவங்கி ஜூலையில் நிறைவு பெற்றது. அப்போது, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். அதன்படி, சட்டப்பேரவை வரும் ஜனவரி, 8ல் துவங்க உள்ளது. இதனை சட்டப்பேரவை செயலர் பூபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுவார். அதன்பின், ஆளுநர் உரை மீது, ஒரு வாரம் விவாதம் நடைபெறும். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் முடிந்த பின், முதல்வர் பதில் அளிப்பார். அதன்பின், ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...