கோவை, டிசம்பர் 28
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக, சமூக பணியியல் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்கள் குழுத் திட்டத்தின் சார்பாக எட்டிமடை பகுதியில் அமைந்துள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் காப்பகமான “அசீசி ஸ்நேஹாலயா”- வில் “ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கோவை மாநகர உறுப்பினரும், தெற்கு பகுதியின் சமூக ஆர்வலர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அப்துல் ஹக்கீம் பங்கேற்று விழிப்புணர்வு உரை ஆற்றினார்.

இதனைத்தொடர்ந்து, “கவலையில் இருந்து விடுதலை” என்ற தலைப்பில் உளவியல் நிபுணர் முஹம்மது இஸ்மாயில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வின் இறுதியாக குழந்தைகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக, சமூக பணியியல் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்கள் குழுத் திட்டத்தின் சார்பாக எட்டிமடை பகுதியில் அமைந்துள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் காப்பகமான “அசீசி ஸ்நேஹாலயா”- வில் “ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கோவை மாநகர உறுப்பினரும், தெற்கு பகுதியின் சமூக ஆர்வலர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அப்துல் ஹக்கீம் பங்கேற்று விழிப்புணர்வு உரை ஆற்றினார்.

இதனைத்தொடர்ந்து, “கவலையில் இருந்து விடுதலை” என்ற தலைப்பில் உளவியல் நிபுணர் முஹம்மது இஸ்மாயில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வின் இறுதியாக குழந்தைகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.