கோவை, டிசம்பர் 27
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறுவரையறை வரைவு மீது பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு சட்டம் 23/2017 மற்றும் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின்படி 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட கிராம ஊராட்சி வார்டு வரைவு மறுவரையறை கருத்துருக்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வரைவு மறுவரையறையின் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். அவற்றை, எழுத்துப்பூர்வமாகச் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்), மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ ஜனவரி 02 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறுவரையறை வரைவு மீது பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு சட்டம் 23/2017 மற்றும் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின்படி 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட கிராம ஊராட்சி வார்டு வரைவு மறுவரையறை கருத்துருக்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வரைவு மறுவரையறையின் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். அவற்றை, எழுத்துப்பூர்வமாகச் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்), மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ ஜனவரி 02 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம்.