கோவை, டிசம்பர் 26
மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வரும் பவானி ஆற்றில் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதந்தது இதனால் மேட்டுப்பாளையம் மக்கள் அதிர்ச்சியடையந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சமாண்ணா நீருந்து நிலையம் அருகே மிதந்த இந்த சடலம் மீட்பதற்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என மக்கள் தெரிவித்தனர் ஆனால் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொது மக்களே மீட்கும் முயற்சி யில் இறங்கியுள்ளனர்.
"இந்த சடலம் முழுவதும் அழுகிய நிலையில் காணப்படுவதால் சமாண்ணா தடுப்பனையில் தண்ணீர் முழுவதும் திறந்துவிடப்பட வேண்டும் அதன் பிறகே மக்களுக்கு குடிநீர் விநியோகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், இல்லை என்றால் தொற்று நோய் ஏற்படும் ஆபாயம் உள்ளது," என்று சமூக ஆர்வலர் எம்.ஜெய்குமார் கூறினார்.
மேலும் இப்பகுதி மக்கள் கூறுகையில் அதிகாரிகள் அலட்சியம் இன்றி செயல்பட வேண்டும். பவானி ஆற்றில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அதிகாரிகள் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.