குடி தண்ணீரில் மிதந்த சடலம்; மேட்டுப்பாளையம் மக்கள் அதிர்ச்சி


கோவை, டிசம்பர் 26

மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வரும் பவானி ஆற்றில் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதந்தது இதனால் மேட்டுப்பாளையம் மக்கள் அதிர்ச்சியடையந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சமாண்ணா நீருந்து நிலையம் அருகே மிதந்த இந்த சடலம் மீட்பதற்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என மக்கள் தெரிவித்தனர் ஆனால் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொது மக்களே மீட்கும் முயற்சி யில் இறங்கியுள்ளனர்.

"இந்த சடலம் முழுவதும் அழுகிய நிலையில் காணப்படுவதால் சமாண்ணா தடுப்பனையில் தண்ணீர் முழுவதும் திறந்துவிடப்பட வேண்டும் அதன் பிறகே மக்களுக்கு குடிநீர் விநியோகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், இல்லை என்றால் தொற்று நோய் ஏற்படும் ஆபாயம் உள்ளது," என்று சமூக ஆர்வலர் எம்.ஜெய்குமார் கூறினார்.

மேலும் இப்பகுதி மக்கள் கூறுகையில் அதிகாரிகள் அலட்சியம் இன்றி செயல்பட வேண்டும். பவானி ஆற்றில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அதிகாரிகள் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...