கோவை, டிசம்பர் 25
பணப்பட்டுவாடா புகார் எழுந்தும் தேர்தலை நிறுத்த தவறியதாக தேர்தல் ஆணையத்தின் மீது தேசிய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93- வது பிறந்தநாளையொட்டி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
பின்னர், சவுரிபாளையம் மற்றும் உப்பிலியபாளையம் ஆகிய பகுதிகளில் தேசிய கயிறு வாரியத்தலைவர் சி.பி.ராதா கிருஷணன் பா.ஜ.க. அலுவலகங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது பணப்படுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. தேர்தல் ஆணையம் இந்த புகாரின் அடிப்படையில் தேர்தலை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யத்தவறிவிட்டது.
பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு நன்மை செய்ய முன்வரமாட்டார்கள். இந்த இடைத்தேர்தல் வெற்றி தற்காலிகமானது.
எதிர்காலங்களில் கடுமையான தேர்தல் விதிமுறைகள் கொண்டு வந்தால் தான் ஜன நாயகம் வெல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பணப்பட்டுவாடா புகார் எழுந்தும் தேர்தலை நிறுத்த தவறியதாக தேர்தல் ஆணையத்தின் மீது தேசிய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93- வது பிறந்தநாளையொட்டி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
பின்னர், சவுரிபாளையம் மற்றும் உப்பிலியபாளையம் ஆகிய பகுதிகளில் தேசிய கயிறு வாரியத்தலைவர் சி.பி.ராதா கிருஷணன் பா.ஜ.க. அலுவலகங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது பணப்படுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. தேர்தல் ஆணையம் இந்த புகாரின் அடிப்படையில் தேர்தலை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யத்தவறிவிட்டது.
பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு நன்மை செய்ய முன்வரமாட்டார்கள். இந்த இடைத்தேர்தல் வெற்றி தற்காலிகமானது.
எதிர்காலங்களில் கடுமையான தேர்தல் விதிமுறைகள் கொண்டு வந்தால் தான் ஜன நாயகம் வெல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.