பணப்பட்டுவாடா புகார் எழுந்தும் தேர்தலை நிறுத்த தவறியதாக தேர்தல் ஆணையத்தின் மீது சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டு

கோவை, டிசம்பர் 25

பணப்பட்டுவாடா புகார் எழுந்தும் தேர்தலை நிறுத்த தவறியதாக தேர்தல் ஆணையத்தின் மீது தேசிய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93- வது பிறந்தநாளையொட்டி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

பின்னர், சவுரிபாளையம் மற்றும் உப்பிலியபாளையம் ஆகிய பகுதிகளில் தேசிய கயிறு வாரியத்தலைவர் சி.பி.ராதா கிருஷணன் பா.ஜ.க. அலுவலகங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது பணப்படுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. தேர்தல் ஆணையம் இந்த புகாரின் அடிப்படையில் தேர்தலை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யத்தவறிவிட்டது.

பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு நன்மை செய்ய முன்வரமாட்டார்கள். இந்த இடைத்தேர்தல் வெற்றி தற்காலிகமானது.

எதிர்காலங்களில் கடுமையான தேர்தல் விதிமுறைகள் கொண்டு வந்தால் தான் ஜன நாயகம் வெல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...