ஆர்.கே. நகரில் வெற்றிவாகை சூடினார் தினகரன் !


டிசம்பர் 24

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவரது சொந்த தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக, தினகரன் அணி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இதனைத்தொடர்ந்து, பல்வேறு பரபரப்புக்கு இடையே வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் இன்று (டிசம்பர் 24) நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய டி.டி.வி. தினகரன் 89,013 வாக்குகள் பெற்று 40.707 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியினை பெற்றார். இதற்கு அடுத்தபடியாக மதுசூதனன் (அதிமுக) 48,306 வாக்குகளும், மருதுகணேஷ் (திமுக) 24,651 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், திமுக, பாஜக உள்ளிட்ட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பாஜக 1417 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் அதனை விட நோட்டா அதிக வாக்கினை அதாவது 2323 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...