கோவை , டிசம்பர் 24
மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் என்கிற "பிசி" ராஜன்.
பிக்பாக்கெட் அடித்து வரும் பணத்தில் ஊரைச் சுற்றித்திரிவதே இவரின் அன்றாட பணியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், பண்டிகை தினம் நெருங்குவதை முன்னிட்டு இன்று காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தனது கைவரிசையை காட்டியுள்ளார் இவர்.
பேருந்துக்காக காத்திருந்த பயணியிடம் இருந்து 3 ரூபாய் சில்லறையை பிக்பாக்கெட் அடித்துவிட்டு ஓடினார்.
அப்போது அங்கு மப்டியில் இருந்த போலீசார் பிசி ராஜனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பிசி ராஜனுக்கு பிக்பாக்கெட் தான் தொழிலாக உள்ளது. இதுவரை பலமுறை அவரை கைது செய்துள்ளோம். 24 முறை சிறைக்கும் அனுப்பியுள்ளோம். ஆனாலும், இதே பாணியில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்து வருகிறார்" என்றனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிசி ராஜனிடம் இருந்து செல்போன் மற்றும் 3 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் என்கிற "பிசி" ராஜன்.
பிக்பாக்கெட் அடித்து வரும் பணத்தில் ஊரைச் சுற்றித்திரிவதே இவரின் அன்றாட பணியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், பண்டிகை தினம் நெருங்குவதை முன்னிட்டு இன்று காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தனது கைவரிசையை காட்டியுள்ளார் இவர்.
பேருந்துக்காக காத்திருந்த பயணியிடம் இருந்து 3 ரூபாய் சில்லறையை பிக்பாக்கெட் அடித்துவிட்டு ஓடினார்.
அப்போது அங்கு மப்டியில் இருந்த போலீசார் பிசி ராஜனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பிசி ராஜனுக்கு பிக்பாக்கெட் தான் தொழிலாக உள்ளது. இதுவரை பலமுறை அவரை கைது செய்துள்ளோம். 24 முறை சிறைக்கும் அனுப்பியுள்ளோம். ஆனாலும், இதே பாணியில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்து வருகிறார்" என்றனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிசி ராஜனிடம் இருந்து செல்போன் மற்றும் 3 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.