பூட்டிய வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை

திருப்பூர், டிசம்பர் 22

திருப்பூர் அருகே பூட்டிய வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் அருகே உள்ளது சோளிபாளையம். இதன் அருகே உள்ள ஆனந்தா அவென் யூ குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதே பகுதியில் குடியிருந்து வருபவர் ராஜேஸ்கண்ணன். பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ராஜேஸ்கண்ணன் தனது குடும்பதாருடன் நேற்று இரவு 12 மணிக்கு கேரளாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு காரில் வந்த இரு நபர்கள் பூட்டியிருந்த ராஜேஸ்கண்ணாவின் முன்புற கேட்டை எட்டி குதித்து உள்ளே சென்று கதவை கம்பியால் உடைத்து வீட்டினுள் சென்று மாடியில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 70 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துவிட்டு காரில் ஏறி தப்பி சென்றுள்ளனர்.

 இதனிடையே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த 15 வேலம்பாளையம்  போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 மேலும் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த குடியிருப்பு பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக காவலாளி பணிக்கு வராததை தெரிந்து கொண்டு திட்டமிட்டே நடைபெற்ற இக்கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...