தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர் ரஜினிகாந்த் : தமிழருவி மணியனுடன் மீண்டும் சந்திப்பு

டிசம்பர் 22

பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தமிழருவி மணியன் இன்று ஆலோசனை நடத்தினார்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக ரசிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடி தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, ரஜினி அரசியலில் கால்பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.  இதனையடுத்து ரஜினி தீபாவளியன்று அரசியல் அறிவிப்பை வெளியிடுவார், காலா படப்பிடிப்பிற்கு பிறகு அரசியலுக்கு வருவார், 2.0 பாடல் ரிலீசுக்குப் பிறகு அரசியலுக்கு வருவார் என்று பல தகவல்கள் வெளியாகின.

கடைசியாக அவருடைய பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் கிறிஸ்துமஸ்க்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார். வருகிற 26-ந்தேதி தொடங்கி 31 ந்தேதி வரை 6 நாட்கள் தினமும் 1,000 ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என்ற பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதத்தின் போது ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த பரபரப்பான காலகட்டத்தில், தமிழக அரசியல்வாதியும், எழுத்தாளரும் பேச்சாளருமான தமிழருவி மணியனை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதே போன்று, இன்றும் தமிழருவி மணியனை ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ரஜினிகாந்த்தால் தான் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும். அவரும் கமலும் அரசியலுக்கு வந்தால் புதிய அரசியல் பாதை உருவாகும் என்று சொல்லி வருகிறார் தமிழருவி மணியன். ரசிகர்களை சந்திக்கும் நிலையில், ரஜினி நடத்தும் இந்த ஆலோசனையில் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

Newsletter

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...