ஜெயலலிதா மரணம் விவகாரம்: ராம்மோகன்ராவிடம் 4 மணி நேரம் விசாரணை

டிசம்பர் 21

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவிடம் நீதிபதி ஆறுமுகசாமி 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஒவ்வொருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இதில், இதுவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு மருத்துவர் பாலாஜி, அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர, முன்னாள் மருத்துவ கல்வி இயக்குநர் நிர்மலா, டீன் நாராயணபாபு, திமுக நிர்வாகி சரவணன் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அரசு மருத்துவர்கள் 8 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜெ.தீபாவின் கணவர் மாதவன் 2 முறை விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சில விவரங்களை மனுவாக எழுதிக் கொடுத்திருந்தார். தீபாவின் அண்ணன் தீபக பல்வேறு தகவல்களை விசாரணை நீதிபதியிடம் கூறி உள்ளார். இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு காணொளியாக எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஜெயலலிதாவுக்கு அரசு ஆலோசகராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சீலா பலகிருஷ்ணனுக்கும், முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, சீலா பலகிருஷ்ணன் விசாரணை ஆணையம் முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் விசாரணை ஆணையத்தின் முன் இன்று ஆஜரானார். அப்போது, நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். மருத்துவமனையில் ஜெயலலிதாவை தாங்கள் பார்த்தீர்களா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளைக் கேட்ட நீதிபதியிடம் ராம்மோகன் ராவ் விளக்கினார். தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக அவர் விளக்கமாகப் பதிலளித்தார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்தது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...