டிசம்பர் 21
நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
நீதிபதி ஓ.பி. ஷைனி தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பை அறிவிக்க உள்ளார். இந்த தீர்ப்பையொட்டி டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட முக்கிய திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.
மேலும், திமுக-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் நீதிமன்றத்தின் உள்ளே உள்ள நிலையில், அப்பகுதியில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.
இதனிடையே, தீர்ப்பு அறிவிப்பிற்குப் பிறகு அப்பகுதியில் பதற்றம் ஏற்படும் சூழல் நிலவுவதால் அங்கு காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனளர்.
நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
நீதிபதி ஓ.பி. ஷைனி தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பை அறிவிக்க உள்ளார். இந்த தீர்ப்பையொட்டி டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட முக்கிய திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.
மேலும், திமுக-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் நீதிமன்றத்தின் உள்ளே உள்ள நிலையில், அப்பகுதியில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.
இதனிடையே, தீர்ப்பு அறிவிப்பிற்குப் பிறகு அப்பகுதியில் பதற்றம் ஏற்படும் சூழல் நிலவுவதால் அங்கு காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனளர்.