கோவை, டிசம்பர் 20
பாரதியார் பல்கலைக்கழகத் தாவரவியல் துறை சார்பில் “மாடித்தோட்டம் - அம்சங்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

தாவரவியல் துறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதன் தலைவர் பேராசிரியர் அ. ராஜேந்திரனின் வரவேற்புரையுடன் விழா துவங்கியது. பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கணபதி பயிற்சிப்பட்டறையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்தும் உரையாற்றினார். அவரது உரையில், பல்கலையில் அறிவியல் முன்னேற்றத்திற்கும் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்க வளர்ச்சிகளை விவரித்தார். அதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் கி.சித்ரா, தொழில் பயிற்சிப் பட்டறை குறித்து முகவுரை ஆற்றினார்
பின்னர், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பயிற்சிப் பட்டறையில் மாடித்தோட்டம் அமைக்கும் செயல்முறைகள், பராமரிப்பு, தாவரங்கள் தேர்வு, இயற்கை உரமிடுதல் குறித்து பயனுறு பயிற்சி அளிக்கப்பட்டது. பதிவாளர் சு. சரவணசெல்வன் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழாவிற்குத் தலைமை தாங்கினார். முனைவர் கூ.சேகர் பயிற்சிப் பட்டறையின் நிறைவுக் கருத்துக்களை தொகுத்து வழங்கினார். முனைவர். மு.வசந்த் நன்றியுரையுடன் பயிற்சிப் பட்டறை நிறைவுபெற்றது. தேசிய அளவிலான தொழில் பயிற்சிப் பட்டறையில் 35-க்கும் அதிகமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்தியா முழுவதும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர் .
பாரதியார் பல்கலைக்கழகத் தாவரவியல் துறை சார்பில் “மாடித்தோட்டம் - அம்சங்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

தாவரவியல் துறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதன் தலைவர் பேராசிரியர் அ. ராஜேந்திரனின் வரவேற்புரையுடன் விழா துவங்கியது. பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கணபதி பயிற்சிப்பட்டறையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்தும் உரையாற்றினார். அவரது உரையில், பல்கலையில் அறிவியல் முன்னேற்றத்திற்கும் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்க வளர்ச்சிகளை விவரித்தார். அதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் கி.சித்ரா, தொழில் பயிற்சிப் பட்டறை குறித்து முகவுரை ஆற்றினார்
பின்னர், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பயிற்சிப் பட்டறையில் மாடித்தோட்டம் அமைக்கும் செயல்முறைகள், பராமரிப்பு, தாவரங்கள் தேர்வு, இயற்கை உரமிடுதல் குறித்து பயனுறு பயிற்சி அளிக்கப்பட்டது. பதிவாளர் சு. சரவணசெல்வன் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழாவிற்குத் தலைமை தாங்கினார். முனைவர் கூ.சேகர் பயிற்சிப் பட்டறையின் நிறைவுக் கருத்துக்களை தொகுத்து வழங்கினார். முனைவர். மு.வசந்த் நன்றியுரையுடன் பயிற்சிப் பட்டறை நிறைவுபெற்றது. தேசிய அளவிலான தொழில் பயிற்சிப் பட்டறையில் 35-க்கும் அதிகமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்தியா முழுவதும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர் .