”மாடித்தோட்டம் குறித்த தேசிய அளவிலான தொழில் பயிற்சிப்பட்டறை”

கோவை, டிசம்பர் 20

பாரதியார் பல்கலைக்கழகத் தாவரவியல் துறை சார்பில் “மாடித்தோட்டம் - அம்சங்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.



தாவரவியல் துறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதன் தலைவர் பேராசிரியர் அ. ராஜேந்திரனின் வரவேற்புரையுடன் விழா துவங்கியது. பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கணபதி பயிற்சிப்பட்டறையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்தும் உரையாற்றினார். அவரது உரையில், பல்கலையில் அறிவியல் முன்னேற்றத்திற்கும் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்க வளர்ச்சிகளை விவரித்தார். அதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் கி.சித்ரா, தொழில் பயிற்சிப் பட்டறை குறித்து முகவுரை ஆற்றினார் 

பின்னர், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பயிற்சிப் பட்டறையில் மாடித்தோட்டம் அமைக்கும் செயல்முறைகள், பராமரிப்பு, தாவரங்கள் தேர்வு, இயற்கை உரமிடுதல் குறித்து பயனுறு பயிற்சி அளிக்கப்பட்டது. பதிவாளர் சு. சரவணசெல்வன் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழாவிற்குத் தலைமை தாங்கினார். முனைவர் கூ.சேகர் பயிற்சிப் பட்டறையின் நிறைவுக் கருத்துக்களை தொகுத்து வழங்கினார். முனைவர். மு.வசந்த் நன்றியுரையுடன் பயிற்சிப் பட்டறை நிறைவுபெற்றது. தேசிய அளவிலான தொழில் பயிற்சிப் பட்டறையில் 35-க்கும் அதிகமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்தியா முழுவதும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர் .

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...