பிப்.,1 முதல் கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான ரயில்சேவையில் தற்காலிக மாற்றம்

கோவை, டிசம்பர் 20

ரயில்நிலைய விரிவாக்கப்பணிகள் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான ரயில் சேவையில் பிப்ரவரி 1-ம்தேதி முதல் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைமேடைகளின் நீளத்தை 23 ரயில்பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பது தொடர்பான பணிகளுக்காக அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரையிலான 31 நாட்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ரயில்சேவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்கள் பின்வருமாறு:

ரயில் எண். 12671/12672 சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையிலான நீலகிரி விரைவு ரயில், கோவை - மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்யப்பட்டு, கோவையிலேயே நிறுத்தப்படுவதுடன் அங்கிருந்தே புறப்படும்.

ரயில் எண். 56145/56146, 56147/56148, 56149/56150, 56151/56144 கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில், மேட்டுப்பாளையம் காரமடை இடையே ரத்து செய்யப்பட்டு, காரமடையில் நிறுத்தப்படுவதுடன் அங்கிருந்தே புறப்படும்.

பயணிகள் இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...