கோவை, டிசம்பர் 18
ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி பாரத் சேனா அமைப்பினர் பீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோவை நகரில் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பல்வேறு நட்சத்திர விடுதிகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி பாரத்சேனா அமைப்பினர் பீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களிடம் இருந்த பாட்டில்களை கைப்பற்றினர். பின்னர், அந்த பாட்டில்களை பரிசோதித்த போது அதில் நீர் நிரப்பிக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- இன்னும் சில தினங்களில் 2018 ஆம் ஆண்டு துவங்கவுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி தினம் இரவு இந்திய கலாச்சாரத்திற்கு எதிராகப் புத்தாண்டு என்ற போர்வையில் நடன நிகழ்ச்சிகள், மது விருந்துகள் உள்ளிட்டவை தனியார் விடுதிகளில் நடைபெறும். மேலும், நள்ளிரவில் வான வேடிக்கை, பொது இடங்களில் கூடுவது உள்ளிட்டவைகளும் நடைபெறும். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகம் இதுபோன்ற செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி பாரத் சேனா அமைப்பினர் பீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோவை நகரில் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பல்வேறு நட்சத்திர விடுதிகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி பாரத்சேனா அமைப்பினர் பீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களிடம் இருந்த பாட்டில்களை கைப்பற்றினர். பின்னர், அந்த பாட்டில்களை பரிசோதித்த போது அதில் நீர் நிரப்பிக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- இன்னும் சில தினங்களில் 2018 ஆம் ஆண்டு துவங்கவுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி தினம் இரவு இந்திய கலாச்சாரத்திற்கு எதிராகப் புத்தாண்டு என்ற போர்வையில் நடன நிகழ்ச்சிகள், மது விருந்துகள் உள்ளிட்டவை தனியார் விடுதிகளில் நடைபெறும். மேலும், நள்ளிரவில் வான வேடிக்கை, பொது இடங்களில் கூடுவது உள்ளிட்டவைகளும் நடைபெறும். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகம் இதுபோன்ற செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
