புத்தாண்டு தினத்திற்கு தடை விதிக்கக் கோரி பீர் பாட்டிலுடன் வந்த பாரத் சேனா அமைப்பினர்

கோவை, டிசம்பர் 18

ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி பாரத் சேனா அமைப்பினர் பீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோவை நகரில் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பல்வேறு நட்சத்திர விடுதிகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி பாரத்சேனா அமைப்பினர் பீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களிடம் இருந்த பாட்டில்களை கைப்பற்றினர். பின்னர், அந்த பாட்டில்களை பரிசோதித்த போது அதில் நீர் நிரப்பிக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- இன்னும் சில தினங்களில் 2018 ஆம் ஆண்டு துவங்கவுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி தினம் இரவு இந்திய கலாச்சாரத்திற்கு எதிராகப் புத்தாண்டு என்ற போர்வையில் நடன நிகழ்ச்சிகள், மது விருந்துகள் உள்ளிட்டவை தனியார் விடுதிகளில் நடைபெறும். மேலும், நள்ளிரவில் வான வேடிக்கை, பொது இடங்களில் கூடுவது உள்ளிட்டவைகளும் நடைபெறும். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகம் இதுபோன்ற செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.



Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...