கல்லூரி பயிலும் மாணவ, மாணவியருக்கான கல்விக்கடன் முகாம்

கோவை, டிசம்பர் 14

கோவை மாவட்டத்தில் கல்லூரி படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி 2016- 2017 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்கள், அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாகக் கோவை மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

ஏற்கனவே, பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில், கோவை மாவட்டத்தில் இக்கவ்வியாண்டில் வங்கிக்கடனுக்கு மனு செய்து கிடைக்கப்பெறாமல், தற்போது கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் வரும் டிசம்பர் 19ம் தேதியன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட முன்னோடி வங்கியின் உதவியுடன் கோவை, வின்சென்ட் சாலை, கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லாயன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

எனவே, கல்லூரியில் தற்போது பயிலும் மாணவ, மாணவியர்களில் கல்விக்கடன் தேவைப்படுவோர் வங்கிக்கடன் சார்பான விண்ணப்பத்தின் நகல் மற்றும் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...