கோவை, டிசம்பர் 14
கோவை மாவட்டத்தில் கல்லூரி படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி 2016- 2017 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்கள், அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாகக் கோவை மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
ஏற்கனவே, பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில், கோவை மாவட்டத்தில் இக்கவ்வியாண்டில் வங்கிக்கடனுக்கு மனு செய்து கிடைக்கப்பெறாமல், தற்போது கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் வரும் டிசம்பர் 19ம் தேதியன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட முன்னோடி வங்கியின் உதவியுடன் கோவை, வின்சென்ட் சாலை, கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லாயன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
எனவே, கல்லூரியில் தற்போது பயிலும் மாணவ, மாணவியர்களில் கல்விக்கடன் தேவைப்படுவோர் வங்கிக்கடன் சார்பான விண்ணப்பத்தின் நகல் மற்றும் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கல்லூரி படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி 2016- 2017 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்கள், அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாகக் கோவை மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
ஏற்கனவே, பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில், கோவை மாவட்டத்தில் இக்கவ்வியாண்டில் வங்கிக்கடனுக்கு மனு செய்து கிடைக்கப்பெறாமல், தற்போது கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் வரும் டிசம்பர் 19ம் தேதியன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட முன்னோடி வங்கியின் உதவியுடன் கோவை, வின்சென்ட் சாலை, கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லாயன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
எனவே, கல்லூரியில் தற்போது பயிலும் மாணவ, மாணவியர்களில் கல்விக்கடன் தேவைப்படுவோர் வங்கிக்கடன் சார்பான விண்ணப்பத்தின் நகல் மற்றும் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.