கல்லூரி பயிலும் மாணவ, மாணவியருக்கான கல்விக்கடன் முகாம்

கோவை, டிசம்பர் 14

கோவை மாவட்டத்தில் கல்லூரி படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி 2016- 2017 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்கள், அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாகக் கோவை மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

ஏற்கனவே, பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில், கோவை மாவட்டத்தில் இக்கவ்வியாண்டில் வங்கிக்கடனுக்கு மனு செய்து கிடைக்கப்பெறாமல், தற்போது கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்காகக் கல்விக்கடன் முகாம் வரும் டிசம்பர் 19ம் தேதியன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட முன்னோடி வங்கியின் உதவியுடன் கோவை, வின்சென்ட் சாலை, கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லாயன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

எனவே, கல்லூரியில் தற்போது பயிலும் மாணவ, மாணவியர்களில் கல்விக்கடன் தேவைப்படுவோர் வங்கிக்கடன் சார்பான விண்ணப்பத்தின் நகல் மற்றும் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...