சோலார் பேனல் மோசடி வழக்கு: கேரள முன்னாள் முதலமைச்சர் மீது சரிதா நாயர் குற்றச்சாட்டு

கோவை, டிசம்பர் 14

சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, தன்னை சிக்க வைத்ததாக நடிகை சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்துத் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக கேரள நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சரிதாநாயர் இன்று கோவை 6 -வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், சாட்சிகள் வராததால், இந்த வழக்கு வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு நீதிபதி ராஜவேல் ஒத்திவைத்தார்.

இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கேரள சோலார் பேனல் வழக்கில் அரசியல் பிரமுகர்கள் உள்ளதால் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது. கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியால் தான் இந்த வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். முழுமையான விசாரணை முடிந்து கண்டிப்பாக உம்மன்சாண்டி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறினார். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...