சோலார் பேனல் மோசடி வழக்கு: கேரள முன்னாள் முதலமைச்சர் மீது சரிதா நாயர் குற்றச்சாட்டு

கோவை, டிசம்பர் 14

சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, தன்னை சிக்க வைத்ததாக நடிகை சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்துத் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக கேரள நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சரிதாநாயர் இன்று கோவை 6 -வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், சாட்சிகள் வராததால், இந்த வழக்கு வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு நீதிபதி ராஜவேல் ஒத்திவைத்தார்.

இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கேரள சோலார் பேனல் வழக்கில் அரசியல் பிரமுகர்கள் உள்ளதால் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது. கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியால் தான் இந்த வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். முழுமையான விசாரணை முடிந்து கண்டிப்பாக உம்மன்சாண்டி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறினார். 

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...