கோவை, டிசம்பர் 14
கோவையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து கேரளா பத்தினம் திட்டா பகுதிக்கு 34 பயணிகளுடன் கேரளா லைன் டிராவல்ஸ் தனியார் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டது.
பேருந்தை எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சஜன் என்பவர் இயக்கியுள்ளார்.
இன்று காலை 5 மணியளவில் அந்த பேருந்து எல்&டி பைபாஸ் அருகே சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்து பயணிகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து கேரளா பத்தினம் திட்டா பகுதிக்கு 34 பயணிகளுடன் கேரளா லைன் டிராவல்ஸ் தனியார் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டது.
பேருந்தை எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சஜன் என்பவர் இயக்கியுள்ளார்.
இன்று காலை 5 மணியளவில் அந்த பேருந்து எல்&டி பைபாஸ் அருகே சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்து பயணிகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.