கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் முதலமைச்சர் இல்லம் முற்றுகையிடப்படும்: சாலை பணியாளர் சங்கம்

கோவை, டிசம்பர் 12

சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வரும் டிசம்பர் 20-ம் தேதி குடும்பத்துடன் முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை, திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் கோவை மாவட்ட சாலை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் அம்சராஜ் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். ஏழாவது ஊதிய மாற்ற அரசாணை ஒருநபர் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட சாலை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி வருகின்ற 20-ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை குடும்பத்துடன் முற்றுகையிட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...