கோவை, டிசம்பர் 12
சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வரும் டிசம்பர் 20-ம் தேதி குடும்பத்துடன் முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கோவை, திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் கோவை மாவட்ட சாலை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் அம்சராஜ் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். ஏழாவது ஊதிய மாற்ற அரசாணை ஒருநபர் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட சாலை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி வருகின்ற 20-ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை குடும்பத்துடன் முற்றுகையிட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வரும் டிசம்பர் 20-ம் தேதி குடும்பத்துடன் முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கோவை, திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் கோவை மாவட்ட சாலை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் அம்சராஜ் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். ஏழாவது ஊதிய மாற்ற அரசாணை ஒருநபர் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட சாலை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி வருகின்ற 20-ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை குடும்பத்துடன் முற்றுகையிட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.