கோவை, டிசம்பர் 11
ரூ.40 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பத்திரத்தை வைத்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

புலியகுளம் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, செளரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்டான் என்னும் துணிக்கடை உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரிடம் வீட்டுப் பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றேன். இதில், அசலும், வட்டியையும் சேர்த்து ரூ. 12 லட்சம் திரும்பச் செலுத்திய நிலையிலும், வீட்டுப் பத்திரத்தை தர அவர் மறுத்து வருகிறார்.
மேலும், ரூ. 40 லட்சம் மதிப்பிலான தனது வீட்டு பத்திரத்தில் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கிய ராஜேந்திரன், அதனை முறைகேடாகப் பயன்படுத்தி கார்ப்பரேசன் வங்கியில் கடன் பெற்றுள்ளார். பத்திரத்தை திரும்பக் கேட்ட போது, தனது மகன் ஆல்வின் ஜெரால்டை அடியாட்களை வைத்துத் தாக்கினார். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பத்திரத்தை மீட்டுக் கொடுக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.40 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பத்திரத்தை வைத்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

புலியகுளம் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, செளரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்டான் என்னும் துணிக்கடை உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரிடம் வீட்டுப் பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றேன். இதில், அசலும், வட்டியையும் சேர்த்து ரூ. 12 லட்சம் திரும்பச் செலுத்திய நிலையிலும், வீட்டுப் பத்திரத்தை தர அவர் மறுத்து வருகிறார்.
மேலும், ரூ. 40 லட்சம் மதிப்பிலான தனது வீட்டு பத்திரத்தில் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கிய ராஜேந்திரன், அதனை முறைகேடாகப் பயன்படுத்தி கார்ப்பரேசன் வங்கியில் கடன் பெற்றுள்ளார். பத்திரத்தை திரும்பக் கேட்ட போது, தனது மகன் ஆல்வின் ஜெரால்டை அடியாட்களை வைத்துத் தாக்கினார். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பத்திரத்தை மீட்டுக் கொடுக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.