வீட்டுப்பத்திரத்தை வைத்து மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை, டிசம்பர் 11

ரூ.40 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பத்திரத்தை வைத்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



புலியகுளம் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, செளரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்டான் என்னும் துணிக்கடை உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரிடம் வீட்டுப் பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றேன். இதில், அசலும், வட்டியையும் சேர்த்து ரூ. 12 லட்சம் திரும்பச் செலுத்திய நிலையிலும், வீட்டுப் பத்திரத்தை தர அவர் மறுத்து வருகிறார். 

மேலும், ரூ. 40 லட்சம் மதிப்பிலான தனது வீட்டு பத்திரத்தில் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கிய ராஜேந்திரன், அதனை முறைகேடாகப் பயன்படுத்தி கார்ப்பரேசன் வங்கியில் கடன் பெற்றுள்ளார். பத்திரத்தை திரும்பக் கேட்ட போது, தனது மகன் ஆல்வின் ஜெரால்டை அடியாட்களை வைத்துத் தாக்கினார். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பத்திரத்தை மீட்டுக் கொடுக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...