எழுத்தாளர் பெ.சு.மணிக்கு பாரதி விருது வழங்கி கவுரவித்தது பாரதி பாசறை



கோவை, டிசம்பர் 11




பாரதி பாசறை அமைப்பு சார்பில் எழுத்தாளர் பெ.சு.மணி-க்கு நேற்று மாலை பாரதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.



சுதந்திர போராட்ட தியாகியும், முண்டாசுக் கவிஞருமான பாரதியாரின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை கொண்டாடும் விதமாகவும், பாரதியார் குறித்த ஆய்வாளரும், எழுத்தாளருமான பெ.சு.மணி அவர்களுக்கு பாரதி விருது வழங்கும் விழாவும் நேற்று மாலை நடைபெற்றது.

பாரதி பாசறை அமைப்பு ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கத்தில் நடைபெற்றது.

பாரதி பாசறையின் தலைவர் மோகன் சங்கர் பாரதி விருதை பெ.சு.மணிக்கு வழங்கினர்.



தொடர்ந்து பெ.சு. மணி பேசுகையில், "சங்க காலத்தில் அரசு வரிசை அறிதல் முறை வழக்கத்தில் இருந்தது. சிபாரிசின் பேரில் ஒருவரை கவுரவிப்பதை தவிர்த்து, தகுதியான நபர்களை கவுரவிப்பதே இதன் நோக்கம், அதனை பின்பற்றியே தற்போது இந்த விருது எனக்கு வழங்கப்பட்டதாக நினைத்து பெருமை கொள்கிறேன். நான் எழுதிய 79 நூல்களில் 29 நூல்கள் பாரதியார் பற்றிய ஆய்வு நூல்கள் ஆகும். தற்போது அதில் 4 நூல்களை பாரதி பாசறைக்கு அளிக்கிறேன். எதிர்காலத்தில் எனது நூல்கள் மற்றும் பாரதியார் எழுதிய பத்திரிக்கைகளையும் வழங்குவேன்" என்று அவர் கூறினார்.

முன்னதாக பாரதியார் ஆய்வாளரான இளசை மணியன் இயற்றிய "நண்பர்கள் நினைவில் பாரதியார்" என்ற நூல் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழார்வளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...