கோவை, டிசம்பர் 10
கோவையில் செயல்பட்டு வரும் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் "ஆரோக்கியமான நகரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கே.எம்.சி.எச் சார்பில் தொடர்ந்து 24-வது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு. கே. பெரியய்யா கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சூலூர் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் இருந்து சிட்ராவில் அமைந்துள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையினை வந்தடைந்தனர் இதனைத்தொடர்ந்து, மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதுகுறித்து கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியானது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, அதனை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.
கோவையில் செயல்பட்டு வரும் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் "ஆரோக்கியமான நகரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கே.எம்.சி.எச் சார்பில் தொடர்ந்து 24-வது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு. கே. பெரியய்யா கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சூலூர் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் இருந்து சிட்ராவில் அமைந்துள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையினை வந்தடைந்தனர் இதனைத்தொடர்ந்து, மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதுகுறித்து கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியானது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, அதனை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.