ஆரோக்கியமான நகரம், ஆரோக்கியமான வாழ்க்கை விழிப்புணர்வு மாரத்தான்

கோவை, டிசம்பர் 10

கோவையில் செயல்பட்டு வரும் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் "ஆரோக்கியமான நகரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கே.எம்.சி.எச் சார்பில் தொடர்ந்து 24-வது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு. கே. பெரியய்யா கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சூலூர் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் இருந்து சிட்ராவில் அமைந்துள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையினை வந்தடைந்தனர் இதனைத்தொடர்ந்து, மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியானது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, அதனை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...