கிறிஸ்துவ தேவாலயத்தை அடித்து நொறுக்கிய இந்து முன்னணியினர் - பாதிரியார் உள்பட 5 பேர் படுகாயம்


கோவை, டிசம்பர் 9

கோவை அருகே கிறிஸ்துவ தேவாலயத்தை இந்து முன்னணியினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், பாதிரியார் உள்பட ஐந்து பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



மத்தம்பாளையம் அருகே கோட்டைப்பிரிவு பகுதியில் பெந்தகோஸ்தே சபை தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 



தேவாலயத்தின் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் தேவராஜ் என்பவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் கூடியிருந்த கவிதா, சந்திரசேகரன் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணியினர், தேவாலயத்தில் உள்ளே புகுந்து சுவரில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடி மற்றும் மேசை, நாற்காலிகள் உட்பட பல பொருட்களை அடித்து உடைத்தனர். 



அதோடு, அங்கு இருந்த போதகர் கார்த்திக்கை பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அந்தக் கும்பலால் தாக்கப்பட்ட ஐந்து பேரில் ஒரு பெண்ணுக்கு கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டது. 



இதனையடுத்து, தகவலறிந்து போலீஸார் வருவதற்குள், காவி கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.  இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 

சசிகுமார், செல்வம், சந்திரசேகர், கவிதா மற்றும் வினோத்குமார், ஜெயதேவ் ஆகிய 6 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.



தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள்  கோவை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...