கிறிஸ்துவ தேவாலயத்தை அடித்து நொறுக்கிய இந்து முன்னணியினர் - பாதிரியார் உள்பட 5 பேர் படுகாயம்


கோவை, டிசம்பர் 9

கோவை அருகே கிறிஸ்துவ தேவாலயத்தை இந்து முன்னணியினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், பாதிரியார் உள்பட ஐந்து பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



மத்தம்பாளையம் அருகே கோட்டைப்பிரிவு பகுதியில் பெந்தகோஸ்தே சபை தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 



தேவாலயத்தின் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் தேவராஜ் என்பவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் கூடியிருந்த கவிதா, சந்திரசேகரன் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணியினர், தேவாலயத்தில் உள்ளே புகுந்து சுவரில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடி மற்றும் மேசை, நாற்காலிகள் உட்பட பல பொருட்களை அடித்து உடைத்தனர். 



அதோடு, அங்கு இருந்த போதகர் கார்த்திக்கை பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அந்தக் கும்பலால் தாக்கப்பட்ட ஐந்து பேரில் ஒரு பெண்ணுக்கு கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டது. 



இதனையடுத்து, தகவலறிந்து போலீஸார் வருவதற்குள், காவி கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.  இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 

சசிகுமார், செல்வம், சந்திரசேகர், கவிதா மற்றும் வினோத்குமார், ஜெயதேவ் ஆகிய 6 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.



தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள்  கோவை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...