டிச., 25-ம் தேதி குல்பூஷன் ஜாதவை சந்திக்கக் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அனுமதி


டிசம்பர் 08

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, டிசம்பர் 25 ஆம் தேதி சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

உளவு பார்த்ததாகக் கூறி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை சிறைபிடித்த பாகிஸ்தான், அவருக்கு மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, இந்த விவகாரத்தைச் சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றது. இதையடுத்து, குல்பூஷன் ஜாதவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கச் சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே, பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்தக் கோரிக்கையை ஏற்றுள்ள பாகிஸ்தான், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்க அனுமதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்கும் போது இந்திய தூதரக அதிகாரிகளுடன் உடன் செல்ல அனுமதி அளிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...