டிசம்பர் 06
வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகித்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள விகிதமே தொடர்கிறது. அதன்படி, வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 6 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமும், எஸ்எல்ஆர் 19.5 சதவீதமும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கூட்டத்திற்குப் பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடப்பாண்டில் 3-வது மற்றும் நான்காம் காலாண்டில் பணவீக்கம் 4.3, 4.7 சதவீதமாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். விவசாய கடன் தள்ளுபடி, கச்சா எண்ணைய் மீதான வரி குறைப்பு, பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு போன்றவற்றை செய்தால் நிதி பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகித்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள விகிதமே தொடர்கிறது. அதன்படி, வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 6 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமும், எஸ்எல்ஆர் 19.5 சதவீதமும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கூட்டத்திற்குப் பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடப்பாண்டில் 3-வது மற்றும் நான்காம் காலாண்டில் பணவீக்கம் 4.3, 4.7 சதவீதமாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். விவசாய கடன் தள்ளுபடி, கச்சா எண்ணைய் மீதான வரி குறைப்பு, பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு போன்றவற்றை செய்தால் நிதி பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.