டிசம்பர் 04
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த நடிகர் விஷால், தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ் மற்றும் சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். ஏற்கனவே நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருக்கும்போது , நடிகர் விஷாலும் அரசியலில் குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை அண்ணாநகர் மகா காளியம்மன் கோவிலில் அம்மனை வழிபட்டார். பின்னர், அங்கிருந்து நேராகக் காமராஜர் நினைவு இல்லத்துக்குச் சென்ற விஷால், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்குச் சென்று, அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், எம்ஜிஆரின் தாயார் சத்யா நினைவு இடத்திலும், அவரது படத்துக்கும், எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி, ஜெயலலிதா நினைவிடத்திலும் விஷால் மரியாதை செலுத்தினார். பின்னர், ஆர்.கே.நகருக்குச் சென்ற விஷாலுக்கு டோக்கன் எண் 68-வது வழங்கப்பட்டது. சரியாக மாலை 4.20 மணிக்கு வேட்பு மனுவை நடிகர் விஷால் தாக்கல் செய்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த நடிகர் விஷால், தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ் மற்றும் சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். ஏற்கனவே நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருக்கும்போது , நடிகர் விஷாலும் அரசியலில் குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை அண்ணாநகர் மகா காளியம்மன் கோவிலில் அம்மனை வழிபட்டார். பின்னர், அங்கிருந்து நேராகக் காமராஜர் நினைவு இல்லத்துக்குச் சென்ற விஷால், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்குச் சென்று, அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், எம்ஜிஆரின் தாயார் சத்யா நினைவு இடத்திலும், அவரது படத்துக்கும், எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி, ஜெயலலிதா நினைவிடத்திலும் விஷால் மரியாதை செலுத்தினார். பின்னர், ஆர்.கே.நகருக்குச் சென்ற விஷாலுக்கு டோக்கன் எண் 68-வது வழங்கப்பட்டது. சரியாக மாலை 4.20 மணிக்கு வேட்பு மனுவை நடிகர் விஷால் தாக்கல் செய்தார்.