”எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை விட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் தீவிரம் காட்ட வேண்டும்”

கோவை, டிசம்பர் 02

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதை விட, மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதை விட அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது போலவே பிற கடலோர மாவட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அப்பகுதிகளில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் எனத் தெரியவில்லை. 

கடலூரில் இளைஞர் ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகத் தவறான தகவல்களை பாமக நிறுவனர் ராமதாஸ் பரப்பி வருகிறார். அவர் மீது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பேனர் வைப்பது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைக்கு ஒவ்வாதது.  குடும்ப விழாக்களுக்குப் பேனர் வைக்கலாமா, கூடாதா என்பதை விளக்க வேண்டும். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொண்டால் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் நிச்சயம் வெற்றி பெறுவார். பணப்பட்டுவாடாவைத் தவிர்க்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திமுக வேட்பாளரை ஆதரிப்பது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. கோவையில் இளைஞர் ரகு உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். அதிமுக சார்பில் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...