கனமழையால் உதகை ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே உள்ள கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் பலத்த காயம்

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே இருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.



நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மழை காரணமாக ஏற்பட்ட கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, குன்னூர். கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று காலை முதல் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஊட்டி, கோத்தகிரி போன்ற பகுதிகளில் சில இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது.    



இந்நிலையில், இன்றும் பெய்து வரும் கனமழையால், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் 3 பேர் சிக்கிக் கொண்டனர். நீண்டநேரப் போராட்டத்திற்கு பிறகு, அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும், அதில், 2 பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும்பாலும், இடிந்து விழுந்தக் கட்டிடத்தில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்துவது வழக்கம். இன்று சனிக்கிழமையை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகம் விடுமுறை என்பதால், பொதுமக்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 



மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியான சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால், நேற்று போக்குவரத்து கோத்தகிரி வழியே திருப்பி விடப்பட்டது. சாலைகளைச் சீர் செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையாததால், 2-வது நாளாகப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 



மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இருப்பினும் ,கோளாறு சரிசெய்யாததால், ஊட்டி, குன்னூர். கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்தப் பொதுமக்கள் தொடர்ந்து மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 



நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் இன்றும் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்ட பின்னர், மீண்டும் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...